close
Choose your channels

நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களில் மீண்டும் நடிப்பேன்; சீரியல் நடிகை ஸ்ரீதேவி!

Monday, February 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ’தேவதையை கண்டேன்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அசோக், தற்போது சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’காற்றுக்கென்ன வேலி’ மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’பூவே உனக்காக’ ஆகிய சீரியல்களில் ஸ்ரீதேவி அசோக் நடித்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலகில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக்கை பிரபலப்படுத்தியது ‘ராஜா ராணி. என்ற சீரியல் தான். அதேபோல் தங்கம், கல்யாண பரிசு ஆகிய சீரியல்களும் இவருக்கு புகழை பெற்று தந்தது

தற்போது இவரும் ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் சியாமளா என்ற காமெடி மற்றும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் ’பூவே உனக்காக’ சீரியலிலும் ஒரு பாசிட்டிவான கேரக்டரில் அவர் தற்போது நடித்து வருகிறார்

தனுஷின் இரண்டு திரைப்படங்களில் நடித்த நிலையில் படிப்பு மற்றும் திருமணம் காரணமாக திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இருந்த ஸ்ரீதேவி அசோக், தற்போது திரைப்படங்களில் நல்ல கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயார் அவர் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.