close
Choose your channels

காசி தியேட்டரில் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Friday, August 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்பு, தனது சமூக வலைத்தளத்தில் 'நீங்கள் எந்த தியேட்டரில் 'வாலு' படத்தை பார்க்க விரும்புகின்றீர்கள் என்று தனது ரசிகர்களிடம் கேட்ட கேள்விக்கு பெரும்பாலான ரசிகர்கள் சென்னை 'காசி' தியேட்டர் என்று பதிலளித்தனர். இந்நிலையில் இன்று காலை காசி தியேட்டருக்கு சிம்பு நேரடியாக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னை காசி தியேட்டரில் இன்று அதிகாலை 4மணி மற்றும் 8 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிட்டு அதற்கான டிக்கெட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இந்த இரண்டு காட்சிகளும் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்ததால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் இன்று காலை 10 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமானது. சிம்பு மற்றும் ஜெய் ஆகியோர் தியேட்டருக்கு வருகைதந்தனர். சிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் ஆரம்பமான 'வாலு' படத்தின் முதல் காட்சி தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.