close
Choose your channels

30-ஐ 14-ல் முடித்த சிம்பு

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்புவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

காயத்தில் இருந்து மீண்டும் வந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 30 நாட்களில் நடித்து முடிக்க வேண்டிய காட்சிகளை சிம்பு வெறும் 14 நாட்களில் முடித்துவிட்டதாகவும், அவர் இந்த படப்பிடிப்புக்காக பலநேரம் தொடர்ந்து பணிபுரிந்தார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்றும் காலதாமதமாக வருவார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் இந்த தகவல் அவரது இமேஜை உயர்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் வெளிநாட்டில் நடைபெற வேண்டியதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு, மஞ்சிமாமோகன், டேனியல் பாலாஜி, சதீஷ் கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'என்னை அறிந்தால்' ஒளிப்பதிவாளர் டான் மெக்ரதார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை அந்தோணி படத்தொகுப்பு செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.