close
Choose your channels

இரண்டு பாகங்களாக உருவாகும் சிம்புவின் கேங்க்ஸ்டர் படம்: இயக்குனர் தகவல்!

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவில் கமல், ரஜினி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாகவும் தற்போது முதல் பாகம் மட்டுமே ரிலீசாக உள்ளதாகவும் இரண்டாவது பாகம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் இயக்குனர் கெளதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சாதாரண மனிதன் ஒருவன் திடீரென கேங்க்ஸ்டராக மாறியது ஏன் என்பதையும் இரண்டாவது பகுதியாக கேங்க்ஸ்டராக உருவாகிய அவருடைய அதிரடி நடவடிக்கைகள் என்ன என்பதுதான் என்றும் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாவது பாகத்தில் சிம்புவின் லுக் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் கேங்க்ஸ்டர் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.