close
Choose your channels

'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: தயாரிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த பாடலை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் ’மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து இந்த ஒத்திவைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இன்னொரு தேதியில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.