close
Choose your channels

ரூ.50 கோடியை நெருங்கும் 'மாநாடு' வசூல்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் வசூல் அளவிலும் இந்தப்படம் மிகப்பெரிய சாதனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த படம் மூன்றே நாட்களில் 22 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளரே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

’மாநாடு’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் ரூ.49 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டதாகவும் இன்று அல்லது நாளைக்குள் ரூ.50 கோடி வசூலை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் சென்னையில் மட்டும் கடந்த 11 நாட்களில் ரூ.4.80 கோடி வசூலித்துள்ளதாகவும், மிக விரைவில் ரூ.5 கோடி வசூலை பெற்று விடும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் இதுவரை ரஜினியின் ‘2.0’ திரைப்படம் ரூ.24 கோடியும், விஜய்யின் சர்க்கார் ரூ.15 கோடியும், அஜித்தின் விசுவாசம் ரூ.12 கோடியும், சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் ரூ.6 கோடியும் வசூலித்த நிலையில் தற்போது சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் ரூ.5 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.