close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த தகவல்கள்

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை தி.நகர் காபி ஷாப்பில் 2 நாள் நடந்து முடிந்தது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கவுள்ளது.

ஐதராபாத்தில் சுமார் ஒரு மாதம் பிரமாண்டமான செட்டில் படமாக்கப்பட்ட பின்னர் அதனை தொடர்ந்து தேனியில் பிரமாண்டமான மாநாடு காட்சிகள் படமாகிறது. இதில் இந்த படத்தில் நடிக்கும் சிம்பு உள்பட அனைத்து நடிகர்களும் பங்கேற்கின்றனர்.

ஐதராபாத், தேனியை தொடர்ந்து அடுத்தகட்டமாக இலங்கையில் மாநாடு படத்தின் அடுத்டகட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் அதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடப்பதுடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு பேசும் அரசியல் வசனங்கள் தயாராகி விட்டதாகவும் இந்த வசனங்கள் அனைத்தும் சரவெடிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.