close
Choose your channels

'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. சிம்பு ரசிகர்கள் செம குஷி!

Tuesday, September 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்தப் படம் ரூ.60 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயுதபூஜை முடிந்தவுடன் தொடங்கும் என்றும் 20 நாட்கள் நடைபெறும் அந்த படப்பிடிப்புடன் ’பத்து தல’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதால் சிம்பு ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

டிசம்பர் 14ஆம் தேதி ’பத்து தல’ படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு ஒரு பக்கமும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னொரு பக்கமும் நடைபெற்று வருகிறது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் சிம்புவின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.