close
Choose your channels

'வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றேனா? ஆதாரத்தை வெளியிட்ட சின்மயி!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் ஒருபக்கம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பெற்ற பாடகி சின்மயி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார் என்று ஒரு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்காத நிலையில் திடீரென தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தது தான் இந்த வதந்திக்கு காரணமாக கூறப்பட்டது.

இதுகுறித்து பலமுறை பாடகி சின்மயி விளக்கம் கொடுத்த போதிலும் வதந்தி தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருந்த 32வது வாரத்தில் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரே செல்பி இதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சின்மயில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறவில்லை என்பதும் அவரே தான் இரட்டை குழந்தைகளைப் பெற்றார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இனிமேலாவது இந்த வதந்தியை பரப்புபவர்கள் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி சின்மயி தனது இரட்டை குழந்தைகளுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.