close
Choose your channels

தர்மம் தலைகாக்கும் என்பது பொய்யா? தொடரும் நல்லவர்களின் மரணம்.. 'சிறகடிக்க ஆசை' நடிகர் வேதனை..!

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக தர்மம் தலைகாக்கும் என்று சொல்லுவார்கள், ஆனால் தர்மம் செய்யும் நல்லவர்கள் வரிசையாக இறந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அது பொய்யா? என்று நினைக்க தோன்றுகிறது என ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடிக்கும் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே காமெடி நடிகர்களாக இருப்பது மட்டுமின்றி பிற நடிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் வரிசையாக மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக. விவேக், மயில்சாமி, மனோபாலா, ஆகியவர்கள் நடிகர்கள் மட்டுமின்றி சமூக சேவைகளும் செய்து வந்தனர் அந்த வகையில் தான் தற்போது ’லொள்ளுசபா’ சேஷு உயிரிழந்துள்ளார்.

இந்த தொடர் மரணம் குறித்து கருத்து தெரிவித்த ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் செல்வம் என்ற கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் என்பவர் கூறியபோது, ‘தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள், ஆனால் அது உண்மையா என்று தெரியவில்லை, விவேக், மயில்சாமி, மனோபாலாவை தொடர்ந்து தற்போது சேஷு அவர்களும் இறந்திருப்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

சேஷு அண்ணன் ஏற்கனவே சில பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார், அவர் உயிரோடு இருந்தால் இன்னும் பலருக்கு திருமணம் செய்து வைத்திருப்பார். சேஷு மாதிரி வேறு யாரும் சக நடிகர்களுக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள். லைக்கா நிறுவனத்தின் படம் ஒன்றில் அவர் நடிக்க வேண்டிய கேரக்டரை என்னிடம் சொல்லி என்னை நடிக்க வைத்தார்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.