close
Choose your channels

ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. அனிருத் இசை.. மாஸ் தகவல்.!

Wednesday, September 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர், ஷாருக்கானுக்கு எழுதி வைத்த கதையை தமிழுக்கு சில மாற்றம் செய்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ். இவர் ‘கஜினி’ திரைப்படத்தை இந்தியில் இயக்கிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் அப்போது ஷாருக்கானுக்கு ஒரு கதை எழுதினார். ஆனால் அந்த படம் உருவாகவில்லை. இந்த நிலையில் இந்த கதையை தான் தற்போது தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமாக அவர் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ’சீதாராமம்’ திரைப்படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘கத்தி’ ‘தர்பார் படங்களுக்கு இசையமைத்த அனிருத் மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.