close
Choose your channels

அவரை முந்தணும், இவரை முந்தணும் என்ற எண்ணம் இல்லை. 'அயலான்' இசை வெளியிட்டு விழாவில் எஸ்கே...!

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிலையில் மிகவும் குறைவான ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுடன் இந்த விழா நடைபெற்றது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான், இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாரி செல்வராஜ் உள்பட ஒருசிலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ’எனக்கு அவரை முந்தனும் இவரை முந்தனும் என்ற எண்ணம் கிடையாது, தமிழ் சினிமாவில் என்னால் முடிந்த நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை

தெலுங்கில் ஒரு ’பாகுபலி’, கன்னடத்தில் ஒரு ’கேஜிஎப்’, மாதிரி தமிழில் ஒரு ’அயலான்’ என்று இயக்குனர் ரவிக்குமார் மீதான நம்பிக்கையில் தயாரிப்பாளர் கூறினார். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காமெடியாக பேசினார்.

மேலும் ’ரத்தம், துப்பாக்கி, சத்தம் ஆகியவற்றை தான் நம்பவில்லை, ’அயலான்’ படத்தில் ரத்தம் துப்பாக்கி ஆகியவற்றை நம்பாமல் ஏலியனை நம்பி படம் எடுத்திருக்கிறோம், நிச்சயமாக தமிழில் உருவாகும் ஒரு நல்ல படமாக இந்த படம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் முழுக்க முழுக்க லவ் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க ஆசை என்றும் விரைவில் அந்த மாதிரி ஒரு படத்தில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.