close
Choose your channels

சூரியிடம் ரூ.2.7 கோடி மோசடி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

Friday, October 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிலம் வாங்கி தருவதாக நடிகர் சூரியிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்த தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ’வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கியை அந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பள பாக்கியுடன் மேலும் 2.7 கோடி தந்தால், 3 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கி தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து நடிகர் சூரி 2.7 கோடி கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு நிலமும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தயாரிப்பாளர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே சூரி காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் ஆனால் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் சூரி நீதிமன்றம் சென்றதன் பேரில், உடனடியாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சூரியிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் ஐபிஎஸ் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.