close
Choose your channels

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ரஜினிகாந்த் மகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் தற்போது லைகா நிறுவனம் ’பொன்னியின் செல்வன்’ என்ற மெகா பட்ஜெட் படத்தை தயாரித்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி ‘டான்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களையும் இரண்டு ஹிந்தி படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதியுள்ளார். இது ஒரு குடும்ப கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ’3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்றும் இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.