close
Choose your channels

சிம்புவின் அடுத்த படம் 'பாகுபலி' அளவுக்கு இருக்கும்.. சொன்னது யார் தெரியுமா?

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பாகுபலி அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றும் இந்தியாவில் ஐந்து முக்கிய இயக்குனர்களை தேர்வு செய்ய வந்தால் அதில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இன்னும் ஒரு சில வருடங்களில் இருப்பார் என்றும் நடிகர் ரக்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி வருகிறது,.

அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் நடிகராக மட்டுமே உதவி இயக்குனராகவும் பணிபுரிந்த விஜய் டிவி ரக்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தேசிங்கு பெரியசாமி கதை சொல்லும் போதே பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் அவர் சொல்லும் விதத்தை கூர்ந்து கவனித்தால் அந்த கதையின் உலகிற்கு நாம் சென்று விடுவோம் என்று தெரிவித்தார். சிம்பு நடிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி பிரம்மாண்டமாக கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அந்த படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியாது என்றாலும் அவர் கூறிய சில விஷயங்களை பார்த்த போது அந்த படம் நிச்சயம் ’பாகுபலி’ அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்திய அளவில் சிறந்த இயக்குனர்கள் என ஒரு ஐந்து இயக்குனர்களை தேர்வு செய்தால் அதில் ஒருவராக தேசிங்கு பெரியசாமி விரைவில் இடம் பெறுவார் என்றும் அந்த அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.