close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுத்த சிம்பு

Sunday, July 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது தமிழில் மட்டுமே அதிக பாடல்கள் பாடியதாக கூறி வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, நடிகை குஷ்பு, பாடகி சின்மயி உள்பட பலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இசை என்பது மொழி எல்லையை தாண்டியது. ரஹ்மான் நமது தேசத்தின் பெருமை. மொழி என்ற வேலியை எடுத்து வரவேண்டாம். அப்படிப்பட்ட எல்லையிலிருந்து விலகியே எந்தக் கலை வடிவமும் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்
இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'இசைக்கு மொழி என்பதே கிடையாது. எனவே தான் இசை அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜீனியஸ். இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.