close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்த தந்தை-மகன்!

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அடங்கமறு' திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டன் சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் தந்தை-மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படமான 'ஜெயம் ரவி 25' படத்திலும் ஸ்டன் இயக்குனராக ஸ்டன்ட் சிவாவும், நடன இயக்குனராக கெவினும் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த தகவலை ஸ்டண்ட் சிவா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட், 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கும் இந்த படத்தை 'அடங்கமறு' படத்தை தயாரித்த சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்.

ஏற்கனவே 'கோமாளி' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, இந்த படத்தை அடுத்து அஹமது இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.