close
Choose your channels

பிரசவ வலியால் துடிப்பு.. குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தம்.. வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை..!

Sunday, March 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரசவ வலியால் துடித்ததையும், அதன் பின் குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தத்தையும் சீரியல் நடிகை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’பாண்டவர் இல்லம்’ என்பதும் ஐந்து அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகள் சேர்ந்த ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கூறும் கதை தான் இந்த தொடர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனு, கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பம் ஆனார். மேலும் கர்ப்பமான போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் பிரசவ தினத்தன்று அனு வலியால் துடித்ததையும், அதன்பின் குழந்தை பிறந்தவுடன்தனது மகனை கையில் வாங்கிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.