close
Choose your channels

சுந்தர் சி அவர்களின் மேஜிக் இதுதான்: 'அரண்மனை 3' அனுபவம் குறித்து ஆர்யா!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அரண்மனை 3’ திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தை அவ்னி சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த பிரஸ்மீட் சமீபத்தில் நடந்த போது நாயகன் ஆர்யா பேசியபோது சுந்தர் சி ஒரு மேஜிக்மேன் அவர் அனைத்து நட்சத்திரங்களையும் அதிக வேலை வாங்குவார், ஆனால் வேலை வாங்குவதே தெரியாத அளவுக்கு ஜாலியாக இருக்கும் என்று கூறினார்.

‘அரண்மனை 3’ படப்பிடிப்பு காலை 7 மணிக்கெல்லாம் தொடங்கி விடும் என்றும் இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் எல்லா நடிகர்களும் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்களிடத்தில் ஜாலியாக பேசி வேலை என்பதே தெரியாமல் வேலை வாங்கி விடுவார் என்பதும் என்றும் காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு 10 மணிக்கு மேல் முடிந்தாலும் வேலை செய்து அலுப்பே இருக்காது என்றும் அந்த அளவுக்கு அவர் எங்களை ஜாலியாக வேலையில் ஈடுபட வைப்பார் என்றும் அதுதான் அவருடைய மேஜிக் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் மிகவும் மிஸ் செய்வது விவேக் அவர்களை என்றும் அவர் ஒரு ஜீனியஸ் என்றும் அவருடன் நடிக்க வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டு இருந்தேன் என்றும், இதுவரை அமையாத வாய்ப்பு கடைசியாக ‘அரண்மனை 3’ படத்தில் எனக்கு அமைந்தது என்றும் ஆனால் அது தான் கடைசி படம் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உதயநிதி அவர்களுக்கு நான் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்றும், ‘பாஸ் என்ற பாஸ்கரன், மதராசபட்டினம் படங்களை அடுத்து ‘அரண்மனை 3’ படத்தை அவர் ரிலீஸ் செய்கிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆடியன்ஸ்கள் தற்போது தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள் என்றும், சமீபத்தில் வெளியான ’டாக்டர்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சி என்றும் அதேபோல் ‘அரண்மனை 3’ படத்திற்கும் திரையரங்குகளுக்கு ஆடியன்ஸ்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறேன் என்றும் ஆர்யா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.