close
Choose your channels

நான் பிக்பாஸ் வந்ததே அவனை காப்பாத்துறதுக்குதான்: கதறியழுத தாமரை செல்வி!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போதுதான் நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தற்போதுதான் மோத ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை கூறி வரும் நிலையில் இன்று தாமரைச்செல்வி கூறும் காட்சிகள் புரமோ வீடியோவில் உள்ளன

இன்றைய முதல் புரமோ வீடியோவில் தாமரை செல்வி கூறியபோது, ‘என் பையனை என்னிடம் காண்பிக்கவே இல்லை. நான் அவனைத் தேடிப் போனேன், அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை, நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று என் பையன் சொல்லிவிட்டான்.

என்னிடமிருந்து என் பையன் பிரிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. என் பையன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்கு தெரியாமல் போய் விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.

என்னிடம் என் பையன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை, இதனால் நான் தப்பு பண்ணிவிட்டோமே என்று எனக்கு தோன்றுகிறது. அவனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நான் பிக்பாஸ் வந்தேன் என்று கதறி அழுதபடி கூறினார். இந்த காட்சி கலங்க வைக்கும் அளவுக்கு உள்ளதாக கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.