close
Choose your channels

இப்ப வந்தா கூட அந்த படம் வெற்றி பெறும்: 10 வருடங்களாக முடங்கியிருக்கும் படம் குறித்து சுந்தர் சி

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மதகஜராஜா’ என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாத நிலையில் அந்த படம் இப்போது வந்தால் கூட வெற்றி அடையும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி நடிப்பில் உருவான 'மதகஜராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவானது என்பதும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பல வருடங்கள் தீவிரமாக முயற்சித்து ஒரு சில காரணங்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் சி, ’2013 ஆம் ஆண்டு உருவாகிய அந்த படம் இப்போது வெளிவந்தாலும் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் வெற்றிப்படமாகவும் இருக்கும். நானும் விஷாலும் அந்த படத்தை காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூட சொல்லிவிட்டோம், ஆனால் அந்த தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக எங்களுக்கு அந்த படத்தை தரவில்லை. அவருடைய அலுவலகம் திநகரில் தான் இருக்கிறது, நான் முகவரி தருகிறேன், நீங்களே போய் அவரிடம் இந்த படம் குறித்து கேளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.