close
Choose your channels

குரைக்கிற நாய் குரைச்சிகிட்டே தான் இருக்கும்: பென்னி தயால் முடிவுக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர் கமெண்ட்!

Monday, August 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குரைக்கும் நாய்களை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் குரைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் அது மட்டும் தான் அவர்கள் செய்யக் கூடிய வேலை என்றும் பென்னி தயால் முடிவுக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஒருவர் கமெண்ட் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் குறித்து பலர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர்.

இந்த விமர்சனத்தை அடுத்து இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் பேச மாட்டேன் என்றும் அடுத்த சீசனில் நடுவராக வரமாட்டேன் என்றும் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறினார். இந்த முடிவுக்கு போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களில் ஒருவரான குரு என்பவர் இது குறித்து கூறிய போது ’இதுபோன்ற குரைக்கும் நாய்களைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம், அவர்கள் குரைத்து கொண்டே இருக்கட்டும். அது மட்டும் தான் அவர்களால் சரியாக செய்ய முடியும் பணி. நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கின்றோம், உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.