close
Choose your channels

சூர்யா-பாலா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸா?

Wednesday, March 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் கன்னியாகுமரி அருகே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படமும் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை சூர்யா தரப்பு மறுத்துள்ளது.

’சூர்யா 41’ மற்றும் ’வாடிவாசல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸின்போது திரையரங்க உரிமையாளர்களுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் சமீபத்தில் வெளியான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில்தான் வெளியானது என்பதால், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சூர்யாவுக்கும் உள்ள கருத்து வேறுபாடு முடிந்துவிட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.