close
Choose your channels

'என்.ஜி.கே' படக்குழுவினர்களுக்கு தங்கமான பொங்கல் பரிசு கொடுத்த சூர்யா

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின்போது படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நடிகர் சூர்யா தங்கமான பொங்கல் பரிசை அளித்துள்ளார்.

ஆம், இந்த படத்தில் பணிபுரிந்த பெரிய கலைஞர்கள் முதல் டிரைவர், கிளாப் அடிப்பவர் வரை அனைவருக்கும் சூர்யா, தங்கக்காசுகளை தனது கையால் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொருவரின் பெயர் பொறித்த பொங்கல் நல்வாழ்த்து அட்டையையும் அவர் வழங்கியுள்ளார். தன்னுடைய படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு எப்போதுமே மரியாதை அளித்து வரும் சூர்யா, இம்முறை தங்கமான மரியாதையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.