close
Choose your channels

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தொடங்கிய பிசினஸ்.. 'சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் மாஸ் தகவல்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் பல படங்கள் பிசினஸ் ஆகாமல் முடங்கி இருக்கும் நிலையில் சூர்யாவின் ’வாடிவாசல்’ திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது பிசினஸை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 42' படத்தை முடித்தவுடன் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டு கதைய அம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது என்பது தெரிந்ததே. மேலும் ஜல்லிக்கட்டு காட்சிகள் இந்த படத்தில் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக சூர்யா தற்போதைய காளைகளுடன் பழகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவர் ஏற்கனவே ஒரு சில பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே ’வாடிவாசல்’ திரைப்படம் பிசினஸை தொடங்கிவிட்டது கோலிவுட் திரையுலகையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ படத்தின் பிசினஸ் ரூபாய் 500 கோடியை தொட்டுவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.