close
Choose your channels

ஒரே ஒரு தாடியை தோற்கடிக்க இத்தனை கோடியா? டி.ராஜேந்தர் கேள்வி

Thursday, March 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கு இடையே இணைப்புகள், பதுங்குதல், பாய்தல் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்க ஒருசில கருத்துவேற்றுமைகளை மறந்து இரு அணிகள் இணையும் படலமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் தான் ஒதுங்கியிருந்ததாக அனனவரும் நினைத்து கொண்டிருந்ததாகவும், ஆனால் தான் ஒதுங்கவில்லை என்றும் பாய்வதற்காக பதுங்கியதாகவும் டி.ராஜேந்தர் ஆவேச பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், 'திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்சனையை தீர்க்க அதன் தலைவர் தாணு எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். டி.ராஜேந்தர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நின்றால் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்பார் என்று பயந்து எனக்கு எதிராக ஒரு சக்தி சில கோடிகளையும், இன்னொரு சக்தி பல கோடிகளையும் செலவு செய்து வருகிறது. ஒரே ஒரு தாடிக்கு எதுக்கு இத்தனை கோடி?
ஆனால் நான் தேர்தலில் நிற்கவில்லை என்றும், ஒதுங்கிவிட்டதாகவும் பலர் நினைத்தனர். நான் ஒதுங்கவில்லை, பதுங்கினேன். புலி பாய்வதற்காகத்தான் பதுங்கும். நானும் பதுங்கியிருந்தேன், இப்போது பாயத்தொடங்கிவிட்டேன்' என்று ஆவேசமாக கூறினார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விரைவில் டி.ராஜேந்தர் ஒரு அதிரடி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.