close
Choose your channels

செல்போன் கடையில் திருடிய தமிழ் நடிகர் மனைவியுடன் கைது

Friday, June 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் மனைவியுடன் வந்த தமிழ் நடிகர் ஒருவர் அந்த கடையில் விலையுயர்ந்த செல்போன்களை திருடிய காட்சி சிசிடிவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் துணை நடிகராக உள்ள ஆரூன் என்ற தீபக் என்பவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். இவர்கள் செல்போன்களை விலைக்கு வாங்க பார்ப்பது போல் நடித்து ஊழியர்கள் அசந்த நேரத்தில் அங்குள்ள விலையுயர்ந்த செல்போன்களை திருடி தங்களது பைக்குள் மறைத்து வைத்தனர். இதனை சிசிடிவி கேமிராவின் மூலம் பார்த்த கடை ஊழியர்கள் உடனடியாக அரும்பாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து தீபக்கையும் அவரது மனைவியையும் விசாரணை செய்னர். இந்த விசாரணையில் இந்த தம்பதி இந்த கடையில் மட்டுமின்றி இதேபோன்று சென்னையில் உள்ள பல கடைகளில் செல்போன்களை திருடியது தெரிய வந்துள்ளது. அதன்பின் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.