close
Choose your channels

பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் 'லவ் டுடே' படத்திற்காக வருத்தப்படுவார்: தனுஷ் பட நடிகர் பேட்டி..!

Saturday, February 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, அர்ச்சனா கால் பாதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’லவ் டுடே’ படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டிய நிலையில் தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்தவரும் ஸ்டாண்ட் அப் காமெடியுமான கார்த்திக் குமார் இந்த படம் குறித்து கடுமையான விமர்சனம் செய்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ’10 ஆண்டுகளுக்குப் பிறகு ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார். ‘அடிடா அவளை, உதைடா அவள’ என்ற பாடலை உருவாக்கியதற்காக செல்வராகவன் நீண்ட காலத்திற்கு பிறகு வருத்தப்பட்டார் என்றும் அதேபோல் ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.

இந்த படம் பெண்களை மட்டம் தட்டிய ஒரு படம் என்றும், ஒரு ஆண் முன்னோக்கு கதை என்றும் பெண் வெறுப்புணர்ச்சி குறித்த படத்தை எடுத்து விட்டோமே என்று அவர் நிச்சயம் ஒரு நாள் வருதப்படுவார் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.