close
Choose your channels

ரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி!

Friday, December 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார்

மேலும் அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகிய இருவரை நியமனம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் இருவரும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுக திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறியதோடு தேவைப்பட்டால் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ரஜினியின் அரசியல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கருத்தை கூறியுள்ளார். ’நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம்’ என்று அவர் ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.