close
Choose your channels

கஜா புயல் எதிரொலி: கடனை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர்

Saturday, December 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

கடந்த மாதம் வீசிய கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைத்த நிலையில் இன்னும் அங்கு நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மேலும் தமிழகம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் நிவாரண உதவிகளும் குவிந்தது.

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீகடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். இதனை அவர் போஸ்டர் அடித்தும் ஒட்டி அறிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சாதாரண டீக்கடைக்காரர் செய்த இந்த உதவியை உயர் பதவியில் இருக்கும் முன்னாள் டீக்கடைக்காரர்களும் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.