close
Choose your channels

கொரோனா தடுப்பு நிதி: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 50 லட்சமும், உலக நாயகன் கமலஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் மற்றும் பலர் நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசியாகவும் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்கு உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய நடிகர் அஜித் ரூபாய் 25 லட்சம் பெப்சி அமைப்பிற்கு நிதி உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும் அவர் நிதியுதவி செய்துள்ளார் என்றும், மொத்தம் ரூ.1.25 கோடி இன்று ஒரே நாளில் நிதியுதவி செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.