close
Choose your channels

'தளபதி 66' படத்தில் முக்கிய மாற்றம் செய்த விஜய்: வேறு வழியின்றி ஏற்று கொண்ட படக்குழு!

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் ஒரு முக்கிய மாற்றத்தை கூறியதாகவும் அந்த மாற்றத்தை படக்குழுவினர் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் அதன் பின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தளபதி விஜய் இதில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் இந்த கோரிக்கையை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

இதனால் தற்போது ’தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் 100 முதல் 200 தொழிலாளர்கள் வரை வேலை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழகத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் தனது படத்தால் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக விஜய் எடுத்த இந்த முடிவால் பெப்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.