close
Choose your channels

'கோட்' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எங்கே? ஆச்சரியமான தகவல்..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கு பதிலாக புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை சென்று லொகேஷன் பார்த்து விட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய், இலங்கை சென்றால் சில அரசியல் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் குறிப்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் விஜய்யை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து இலங்கை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.