close
Choose your channels

கேரளாவில் இன்று முதல் தளபதி விஜய்யின் செல்பி கிடையாது.. காரணம் இதுதான்..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதும் தெரிந்தது. ஆனால் இன்று முதல் அந்த செல்பி இருக்காது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றனர் என்பது தெரிந்தது.

திருவனந்தபுரத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தினமும் அவர் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார், ரசிகர் கொடுத்த மாலை வாங்கி போட்டுக் கொண்டார், மாற்றுத்திறனாளி ரசிகருடன் ஆறுதலாக பேசினார் உள்பட பல விஷயங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்த நிலையில் விஜய் சென்னை திரும்பி விட்டார். அதனால் தான் இனி திருவனந்தபுரத்தில் இன்று முதல் செல்பி எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.