close
Choose your channels

அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்: 'டாடா' தயாரிப்பாளர்..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘டாடா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், ‘சிவகார்த்திகேயன் போல் கவின் நிச்சயமாக வருவார்’ என கூறியுள்ளார்.

கவின், அபர்ணாதாஸ் நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகிய ‘டாடா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழக முழுவதும் திருப்திகரமான வசூலை பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் லாபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசிய போது, ‘சிவகார்த்திகேயன் போல நிச்சயமாக கவின் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் நடித்த ’மனங்கொத்தி பறவை’ என்ற படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி விழா நடத்திய அதே ஓட்டலில் தான் இப்போது ‘டாடா’ படத்தின் வெற்றி விழாவை நடத்துகிறோம். எனவே நிச்சயமாக சிவகார்த்திகேயன் போல் கவின் தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.