close
Choose your channels

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம்.. 'அரண்மனை 4' நடிகை தான் ஹீரோயின்..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது என்பதும் இந்த சம்பவம் குறித்து ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் மேம் 13-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த் மேசே ந்ன்பவர் நாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’12த் பெயில்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ’அரண்மனை 4’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த ராஷி கண்ணா நடித்துள்ளார். ரஞ்சன் சண்டேல் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் தேர்தல் நேரத்தில் வெளிவர இருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.