close
Choose your channels

ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தமிழ் இயக்குனர்

Thursday, April 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கெளரவ் நாராயணன் தற்போது உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெரும் பாடல் ஒன்றின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு சமீபத்தில் படக்குழுவினர் சென்றனர். தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் திரு மர்வான் யூசுப் என்பவர் இயக்குனர் கௌரவ் நாராயணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஓமன் நாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை ஓமன் நாட்டின் அமைச்சர் திரு மர்வான் யூசுப் பார்த்தார். காட்சிகள் பிரம்மாதமாக இருப்பதாக இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.