close
Choose your channels

தளபதி விஜய் பக்கத்தில கூட யாரும் வர முடியாது.  6 நடிகர்களை குறிப்பிட்டு சொன்ன திருப்பூர் சுப்பிரமணியம்..

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலக இருக்கும் நிலையில் அவரது இடத்தை யார் பிடிப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருப்பூர் சுப்பிரமணியன் விஜய் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என ஆறு நிறைய நடிகர்களை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை மனம்விட்டு கூறினார். அப்போது தளபதி விஜய் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலக இருக்கும் நிலையில் அவருடைய இடத்தை யார் பிடிப்பார்கள்? என்ற கேள்விக்கும் சிவகார்த்திகேயன் பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

‘சிவகார்த்திகேயன் தற்போது ரசிகர்கள் கூட்டத்தை கூட்டலாம், அதே போல் தனுஷ், சூர்யா உட்பட பலரும் ரசிகர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர். ஆனால் ரசிகர் கூட்டத்தை கூட்டுவதால் விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. விஜய்யின் உயரமே வேறு.

சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி, விக்ரம் எல்லாரும் ஒரே லெவலில் தான் இருக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் உள்பட யாரும் ஸ்பெஷல் கிடையாது. விஜய்யின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இவர்கள் தொடர்ச்சியாக நல்ல படங்களையும் வசூல் அதிகமாக கிடைக்கும் படங்களையும் கொடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்

திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் இந்த பேட்டியில் இருந்து விஜய்யின் இடத்தை இப்போதைக்கு யாராலும் பிடிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.