close
Choose your channels

கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

Friday, March 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தங்களுடைய கிராமத்திற்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கீழப்பட்டி என்ற கிராமத்தின் மக்கள் அதிரடியாக முடிவு எடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சங்கராபுரம் கிராமத்தின் எல்லையில் வேலி போட்டு வெளியாட்கள் யாரும் வராமல் தடுப்பதோடு அங்கு இரவு பகலாக சிலர் காவலுக்கும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க இந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் அதிரடி நடவடிக்கையை பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos