close
Choose your channels

இன்று 'அரண்மனை 3' ரிலீஸ்: சுந்தர் சி, உதயநிதிக்கு டுவிட் செய்த ஆர்யா!

Thursday, October 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் முன்பதிவிலிருந்து இந்த படத்தின் வெற்றி உறுதி என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது என்பதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து சற்றுமுன்னர் இந்த படத்தின் நாயகன் ஆர்யா தனது டுவிட்டரில் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ‘இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் ரிலீஸாவதாகவும் இதற்காக சுந்தர் சி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு என்டர்டெயின்மென்ட் படமாக ‘அரண்மனை 3’ அமைந்துள்ளதாகவும் இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து மகிழுங்கள் என்றும் ஆர்யா அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். விடுமுறை நாளில் ஒரு ரசிக்கத்தக்க வகையிலான என்டர்டைன்மென்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.