close
Choose your channels

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

Tuesday, May 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய அந்த பகுதி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பாவிகள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோலிவுட் திரையுலகினர்களும் தூத்துகுடிக்கு சென்றனர்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடிக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை தூத்துகுடி செல்லும் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கவுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை பொது பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளம் மற்றும் பேட்டிகளின் மூலம் குரல் கொடுத்து கொண்டிருந்த ரஜினிகாந்த் முதல்முறையாக மக்களை நேரில் சந்திக்கவுள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.