close
Choose your channels

ரஜினி வீட்டு முன் திடீரென போராட்டம் செய்த திருநங்கைகள்: பெரும் பரபரப்பு

Sunday, April 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திடீரென 8 திருநங்கைகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புளியந்தோப்பு பகுதியை சோ்ந்த 8 திருநங்கைகள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் நேற்று வந்து திடீரென தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது வீட்டின் காவலாளியிடம் ரூ.5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக திருநங்கைகளுக்கு கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து போராட்டம் செய்த திருநங்கைகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரஜினி வீட்டுக்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை செய்ததாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.