close
Choose your channels

பிரகாஷ்ராஜூக்கு நன்றி கூறிய த்ரிஷா: ஏன் தெரியுமா?

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்றும் இது குறித்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதையும் சற்று முன் பார்த்தோம்.

மேலும் அவர் இந்த சேலஞ்சை நடிகர்கள் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்‌ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோர்களுக்கு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை நாமினேட் செய்ததற்கு பிரகாஷ்ராஜுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து த்ரிஷா தனது வீட்டின் தோட்டத்தில் செடி நடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் விரைவில் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து ’அபியும் நானும்’ ‘கில்லி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.