close
Choose your channels

தம்பியை கொலை செய்த பில்லா ஜெகன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
DMK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்து தகராறில் சொந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பில்லா ஜெகன் என்பவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துகுடியை சேர்ந்த பில்லா ஜெகன் என்பவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும், அம்மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பில்லா ஜெகனுக்கும் அவரது தம்பிக்கும் சொத்து தகராறு ஏற்பட, இதில் வாக்குவாதம் முற்றி பில்லா ஜெகன் சொந்த தம்பி என்றும் பாராமல் சுட்டுக்கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், பில்லா ஜெகன் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருப்பதை அறிந்து அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பில்லா ஜெகனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். கட்சி விதிகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பில்லா ஜெகன் நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் திமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos