close
Choose your channels

சன்னிலியோனுக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய உபி அரசு.. என்ன தேர்வு எழுத போகிறார்?

Sunday, February 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு காவலர் தேர்வு எழுத உத்தர பிரதேச மாநில அரசு ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விரைவில் காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதில் ஹால் டிக்கெட் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் சன்னிலியோன் பெயரில் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதை சரியாக சரி பார்க்காமல் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் அவருக்கு தற்போது புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ஹால் டிக்கெட் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சன்னி லியோன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சன்னி லியோன் எதற்காக காவலர் தேர்வு எழுத வேண்டும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சன்னி லியோன் பெயரில் போலியாக விண்ணப்பம் செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க உத்தர பிரதேச மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அந்த நபர் பிடிபடுவார் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.