close
Choose your channels

ரிஷப் பண்ட் பிறந்த நாளில் ஊர்வசி ரெளட்டாலா வெளியிட்ட வீடியோ: மீண்டும் எழுந்த சர்ச்சை!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது முன்னாள் காதலியான நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான ஊர்வசி ரெளட்டாலா, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்-அப் ஆனதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊர்வசி ரெளட்டா, ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மோதி கொண்டதை அடுத்து நெட்டிசன்கள் இருவரையும் விமர்சனம் செய்து ட்ரோல் செய்தனர். குறிப்பாக ஊர்வசி அளித்த பேட்டியில், ‘ஒரு கிரிக்கெட் வீரர் பல மணி நேரம் நான் தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் எனக்காக காத்திருந்தார் என்றும் நான் அவரை சந்திக்க மறுத்து அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலடியாக ரிஷப் பண்ட், ஒருசிலர் பிரபலம் அடைவதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கூறி வருகின்றனர் என்று கூறியதை இருதரப்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று தனது 25வது பிறந்த நாளை ரிஷப் பண்ட் கொண்டாடி வரும் நிலையில் ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஹாப்பி பர்த்டே’ என்று பதிவு செய்து பிளையிங் கிஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அடித்து ரசிகர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.