close
Choose your channels

'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. வருண் ராஜேந்திரன் என்பவர், தான் 2007ஆம் ஆண்டு எழுதிய 'செங்கோல்' என்ற கதைதான் 'சர்கார்' என்ற டைட்டில் படமாகியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் 'சர்கார்' கதை பிரச்சனை தொடர்பாக ஒருபக்கம் எழுத்தாளர் சங்கத்தலைவர் கே.பாக்யராஜ் பேட்டியும், மறுபக்கம் அதற்கு விளக்கம் அளித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், 'நான் எனது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளேன். உண்மை எப்போதும் வெற்றி பெறும். எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகிறது. காலம் இதனை உறுதி செய்யும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.