close
Choose your channels

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்து வரலட்சுமியின் தைரியமான கருத்து

Saturday, March 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்து வரலட்சுமியின் தைரியமான கருத்து

கைநிறைய திரைப்படங்கள் ஒருபக்கம், சமூக சேவை ஒரு பக்கம், திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருவது இன்னொரு பக்கம் என நடிகை வரலட்சுமி பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கோலிவுட், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து அதிர்ச்சியை அளித்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வரலட்சுமி கூறியதாவது:

திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. திரையுலகில் தீர்க்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சனையாக இந்த பிரச்சனை கருதப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாகவே திறமையுள்ள பல நடிகைகளுக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. என்னை பொருத்தவரையில் நடிகைகளுக்கு இதுவொரு மிகபெரிய சவால்தான். இந்த சவாலை எதிர்கொண்டு தான் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.