close
Choose your channels

பள்ளி நண்பர்களுடன் இணையும் இயக்குனர் வசந்தபாலன்: புதிய பட அறிவிப்பு!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வசந்தபாலன் ’ஆல்பம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது மட்டுமின்றி அவருக்கு முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வசந்தபாலன் இயக்கிய அடுத்த படமான ’அங்காடித்தெரு’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ’அரவான்’ ’காவியத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த ’ஜெயில்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். வசந்தபாலன் தனது அடுத்த படத்தில், தான் விருதுநகரில் படித்த பள்ளி நண்பர்களுடன் இணைந்து கைகோர்த்து தொடங்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் ஒன்றை தற்போது வசந்தபாலன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.