close
Choose your channels

'வடசென்னை' அடுத்த பாகத்தை தயாராக வைத்திருக்கும் வெற்றிமாறன்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..

Friday, June 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’வடசென்னை’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை வெற்றிமாறன் இயக்கி தயாராக வைத்திருப்பதாக திரையுலக பிரபலம் ஒருவர் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் வெற்றிமாறன் இயக்க வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் தனுஷே சில மேடைகளில் இது குறித்து கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ’வடசென்னை’ திரைப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அளித்த பேட்டியில் ’வடசென்னை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து 'ராஜன் வகையறா’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாராக வைத்திருப்பதாக தெரிவித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் வெற்றிமாறன் தயவு செய்து அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்

’வடசென்னை’ படத்தின் அடுத்த பாகம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ரகசியத்தை சந்தோஷ நாராயணன் உடைத்த நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.